Tuesday, October 2, 2012


Raport from Madurai Andavan Ashramam
                                                Sreemathe RangaRamanuja Mahadesikaya Namaha


அடியேன் தாஸன்

.

26ம் தேதி காஞ்சியிலே ஸ்வாமி தேசிகன் வரதனை மங்களாசாஸனம் செய்து பிரியாவிடை பெற்றார்.
அதேபோலவே ஆசார்யன் ஸ்ரீமத் ஆண்டவனும் , 90 நாள்கள் மிக இனிதாக சாதுர்மாஸ்ய ஸங்கல்பத்தை நடத்திக் கொடுத்து அனுக்ரஹித்த மதுரை அழகர்களிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டார்.
26ம் தேதி அன்று கள்ளழகர் கோவிலில் மங்களாசாஸனம் செய்துகொண்டு
ஸங்கல்பத்தைப் பூர்த்தி செய்துகொண்டு மதுரையிலிருந்து உத்தானம் ஆவதற்கு அனுமதி பெற்றுக் கொண்டு ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளிடம் விடைபெற்றுக்கொண்டார்.
27ம் தேதி திருமோகூர் எழுந்தருளி ஸ்ரீகாளமேகப் பெருமாளிடம் பிரியாவிடை பெற்றாயிற்று.
28ம் தேதி ஸ்ரீகூடலழகரைக் கண்குளிர மங்களாசாஸனம் செய்து அவரிடமும் நியமனம் பெற்றுக் கொண்டு விடைபெற்றாயிற்று.
அப்படியே திருநக்ஷத்திர உத்ஸவம் நடந்து கொண்டிருக்கும் ஸ்ரீதேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி, ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவனிடமும், ஆசார்ய ஸார்வ பௌமன் ஸ்வாமி தேசிகனிடமும் நெகிழ்ந்து நெக்குருகி விடைபெற்றுக் கொண்டாயிற்று. ஸங்கல்ப காலத்தில் தன் கூடவே இருந்து ஸகல ஏற்பாடுகளையும் குறைவற நடத்திக் கொடுத்த ஆச்ரம சிஷ்யர்களுக்கு ஸகல மங்கலங்களும் அனுக்ரஹிக்க ஆசார்யனிடம் ப்ரார்த்தித்துக் கொண்டு பிரியாவிடை பெற்றாயிற்று.
கள்ளழகர் கோவில் மங்களாசாஸனக் காட்சிகள்
https://picasaweb.google.com/108488779298474174350/HHAtKallazhakarKoilOn26thSeptember?authuser=0&feat=directlink

திருமோகூர் கோவில் மங்களாசாஸனம்
https://picasaweb.google.com/108488779298474174350/HHAtThirumohurOn27thSeptember?authuser=0&feat=directlink

கூடலழகர் கோவில் மங்களாசாஸனம்
https://picasaweb.google.com/108488779298474174350/HHAtKoodalazhakarTempleSeptember292012?authuser=0&feat=directlink
ஸ்ரீதேசிகன் சந்நிதி மங்களாசாஸனம்
https://picasaweb.google.com/108488779298474174350/HHAtDesikanSannidhiOnSeptember292012?authuser=0&feat=directlink
adiyen
dasan
T.Raguveeradayal,
C/O Srirangam Srimad Andavan Ashramam,
Thiruppullani 623532



__._,_.___

No comments:

Post a Comment