Monday, August 20, 2012

Srimath Therazhundur Andavan Tirunakshatram-- Aavani Poorattaathi-- 1st Sept.2012- Celebrations at Therazhundur Divyadesam Temple.

ஸ்ரீ:
ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதேஸ்ரீநிவாஸராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே வேதாந்த ராமானுஜ மஹாதேசிகாய நம:

அவனி புகழ் ஆவணிப்பூரட்டாதி:

ஸ்ரீமத் வேதாந்தராமானுஜ மஹாதேசிகர்களின் திருநக்ஷத்ரம்

நம் ஆச்ரம கூடஸ்தரான வழுத்தூர் ஆண்டவன் ஸ்ரீமத் வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் மற்றும் ஸ்ரீமத் நம்மாண்டவன்(தேரழுந்தூராண்டவன்)ஸ்ரீமத் வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் வார்ஷிகத் திருநக்ஷத்ரம்

01/09/2012 சனிக்கிழமையன்று
காலை 11.00 மணிக்கு
ஸ்ரீமத்ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவனின் திவ்ய நியமனத்தை முன்னிட்டு பூர்வாச்சார்யர்களின் திருநக்ஷத்ரம் திருமங்கை மன்னனால் மங்களாசாஸனம் செய்யப்பட்டதும் ஸ்ரீமத் தேரழுந்தூராண்டவன் அவதரித்ததால் பெருமை பெற்றதுமான
தேரழுந்தூர் ஸ்ரீஆமருவியப்பன் சந்நிதியில்
உபயவேத பாரயணங்களுடனும் பெருமாள், தாயார், கலியன், ஸ்வாமி தேசிகன் விசேஷ திருமஞ்சனத்துடன் நடைபெறவிருக்கிறது. ஸ்ரீமதாண்டவன் திருவடிகளும் அபிமானிகளும் திரளாக எழுந்தருளியிருந்து ஸ்ரீமத்வழுத்தூராண்டவன்,ஸ்ரீமத்நம்மாண்டவன், பெருமாள் க்ருபைக்கு பாத்ரராகும்படி ப்ரார்த்திக்கிறோம்

ஆச்சார்ய பாத ரேணுக்கள்
K.ஜகந்நாதன்(ஆச்ரம ஆராதகர்)
சித்ரகூடம் ரங்கநாதன்.


 

No comments:

Post a Comment